திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘பிக் பாஸ்’ ஜூலியிடம் பண மோசடி – காவல் நிலையத்தில் புகார்!
விஜய் டிவியில் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஒருவர் நகை பறித்ததாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சீசனில் பல பிரபலங்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி கலந்து கொண்டார். முதல் சீசன் என்பதால் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும், எந்த மாதிரி வெளியே காட்டப்படும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எதுவும் தெரியாமல் போட்டியாளர்கள் இருந்தனர்.
பாரதியை ‘மச்சான்’ என கூறி வெறுப்பேற்றும் ஆட்டோ ட்ரைவர் – ‘பாரதி கண்ணம்மா’ இன்றைய எபிசோடு!
அதனால் ஜூலி மற்றும் காயத்ரி ரகுராம் கேரக்டர் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. குறிப்பாக ஜூலி பற்றிய குறும்படங்கள் அதிகம் மக்களிடம் சென்றது. மேலும் ஓவியா ஆரவ் மருத்துவ முத்தம் என பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தது. வயிறு வலிப்பது போல ஜூலி நடித்தது. அதை பார்த்த மற்ற போட்டியாளர்கள் பேசியது என 4 ஆண்டுகள் ஆனாலும் பிக்பாஸில் சிறந்த சீசனாக முதல் சீசன் இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடன நிகழ்ச்சி தொகுப்பாளராக ஜூலி இருந்தார்.
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் பல போட்டோஷூட்களை நடத்தி ஆளே மாறிப்போனார். என்ன தான் மாடலாக மாறினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தாக்கத்தில் இருந்து அவரை ரசிகர்கள் மன்னிப்பதாக இல்லை. அவர் என்ன பதிவு போட்டாலும் அதில் கழுவி ஊற்றி வந்தனர். இந்நிலையில் ஜூலியிடம் ஒருவர் திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்லி ஏமாற்றி பல்சர் பைக் வாங்க பணம், நகைகள் எல்லாம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.