தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – தமாகா முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கவுள்ள பொருட்களை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய தமாகா சார்பில் ஜிகே வாசன் அவர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை அரசிடம் முன்வைத்துள்ளார்.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆட்சியை பிடித்துள்ள திமுக அரசும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பில் 20 பொருட்கள் மற்றும் துணிப்பை சேர்த்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சபரிமலையில் Google Pay மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் – பக்தர்கள் கவனத்திற்கு!
அதாவது பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக்கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் இவற்றை வைக்கும் துணிப்பை போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த 20 பொருட்களோடு சேர்க்கப்பட்டுள்ள கரும்பை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யுமாறு பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
சத்தமே இல்லாமல் சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நிகழ்த்திய சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!
ஏனெனில் மழை காரணமாக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு விவசாயிகளிடம் நேரடியாக பொங்கல் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை கொள்முதல் செய்தால் அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தமாகா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.