சபரிமலையில் Google Pay மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் – பக்தர்கள் கவனத்திற்கு!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இணையவழி சேவையான கூகுள் பே மூலமாக காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்களில் QR code பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சபரிமலை கோவில்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அடிப்படையில் தினசரி 30,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இம்மாதம் முதல் தினசரி 50,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல முன்பதிவு செய்துள்ளவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வேண்டுகோள்!
தற்போது ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்காக ஸ்பாட் புக்கிங் என்ற உடனடி டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் இணைய வழி சேவை மூலம் காணிக்கை செலுத்தும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்களில் QR Code பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் மொபைல் எண் மூலமும் QR code பயன்படுத்தியும் ‘கூகுள் பே’ செயலி வழியாகவும் காணிக்கை செலுத்தலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் DigiLocker முறையில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை – அரசாணை வெளியீடு!
மேலும் இந்த காணிக்கை சேவையை தனலட்சுமி வங்கியுடன் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம்போர்டு செய்துள்ளது. இந்த ஆன்லைன் சேவை பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் ஆன்லைன் காணிக்கை செலுத்துவதற்கான QR Code பலகை இந்த சபரிமலைக்கு செல்லும் பாதைகளிலும், பல்வேறு இடங்களில் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சபரிமலை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.