திருப்பதி தரிசனம் செல்ல முன்பதிவு செய்துள்ளவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வேண்டுகோள்!
ஆந்திர மாநிலத்தின் திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு செல்லும் வழியில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் சில தினங்கள் கழித்து தரிசனம் செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தரிசனம் தள்ளிவைப்பு:
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் திருமலைக்கு செல்லும் வழியில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த சேதங்களை சரிசெய்யும் பணி இடையூறு இல்லாமல் நடைபெறும் விதமாக பக்தர்களுக்கு தரிசனத்திற்கு வர குறிப்பிட்ட சில தினங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நாளை (டிச.3) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் சுமார் 5 டன் எடையுள்ள பாறை திடீரென சரிந்து விழுந்துள்ளது. பின்னர் தொடர்ந்து உருண்டு சென்ற பாறை வளைவுப்பாதையாக ஒன்றன் கீழ் ஒன்றாக உள்ள பாதைகளில் சரிந்து விழுந்தது. இதனால் 3 இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளது. இதனால் திருமலைக்கு செல்லும் வழியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் DigiLocker முறையில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை – அரசாணை வெளியீடு!
அதனால் சுழற்சி முறையில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது முதல் அரைமணி நேரத்திற்கு திருமலைக்கு செல்லும் பேருந்துகளும், அடுத்த அரைமணி நேரத்திற்கு திருமலையில் இருந்து கீழிறங்கும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இன்னும் 3 நாட்களுக்கு ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்தை தள்ளிவைக்குமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலைமை சரியான பின்னர் அதே டிக்கெட்டில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.