பிரசவத்துக்கு பின்பு ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா வெளியிட்ட முதல் பதிவு – வைரலாகும் புகைப்படம்!
தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினா தனது பிரசவத்துக்காக சீரியலை விட்டு விலகி சில காலம் ஓய்வெடுத்து வரும் நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
நடிகை பரினா
விஜய் டிவியில் கிட்டத்தட்ட 650 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. ஆரம்பத்தில் ஏகப்பட்ட ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும் இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக அதிகபட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து TRP ரேட்டிங்கில் முதன்மையான இடத்தை பிடித்து வருகிறது. இதற்கு இந்த சீரியலின் கதைக்களமும், விறுவிறுப்பும் ஒரு முக்கிய காரணமாகும்.
விஜய் டிவியில் புதிதாக களமிறக்கப்படும் 2 நிகழ்ச்சிகள் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் குஷி!
இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக நடித்து வந்த நடிகை பரினா இந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அதாவது, திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து தனது முதல் குழந்தையை எதிர்பார்த்திருந்த நடிகை பரினா பிரசவத்துக்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு தற்காலிகமாக விலகி இருக்கிறார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னதாக ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை பரினா ஓய்வெடுத்து வருகிறார்.
இருந்தாலும் வழக்கம் போல சமூக வலைதள பக்கத்தில் ஆர்வமாக இருந்து வரும் பரினா, தனது பிரசவம் குறித்த சில விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதை தொடர்ந்து தற்போது மீண்டுமாக ஒரு தயாரிப்பு குறித்த விளம்பரம் தொடர்பான புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் நடிகை பரினா. எவ்வாறாயினும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக நடிகை பரினாவை மிஸ் செய்து வந்த ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் உற்சாகத்தை கொடுத்துள்ளது.