‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா வெங்கட்டிற்கு கொரோனா – ‘எதிரிக்கு கூட இந்த நிலை வர கூடாது’ உருக்கமான பதிவு!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகர் வெங்கட் தற்போது லேட்டஸ்டாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து வரும் ரசிகர்கள் தங்களது ஆறுதலை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பலருக்கும் பிடித்த சீரியலாக இருப்பது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். கூட்டு குடும்பத்தில் ஏற்படும் எதார்த்தமான நிகழ்வுகளை மிகவும் அழகாக எடுத்து காட்டி வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் முக்கிய கட்டமாக குடும்பத்தினர் அனைவரும் சென்னை சென்றதால் வீட்டில் சுவர் ஏறி குதித்து கடை சாவியை எடுத்து கடையை பார்த்து கொள்கிறார். இதனை அறிந்து விட்டு மூர்த்தி மிகவும் கோபம் அடைகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகும் ஹீரோ அருண்? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?
கண்ணனை நன்றாக திட்டியும் விடுகிறார். பின்னர், தான் அதிகமாக கண்ணனை திட்டி விட்டோம் என்று உணர்ந்து வருத்தமும் அடைகிறார். இப்படி பல வித பாச போராட்டங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இந்த அளவிற்கு வெற்றி அடைவதற்கு காரணம் கதைக்களம் தான் என்று கூறினாலும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் தனி பங்கு இருக்கிறது. அந்த வகையில் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக இருப்பது ஜீவா – மீனா ஜோடி தான். இதில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் வெங்கட்டிற்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறத.
ஹேமா, லட்சுமியுடன் இணைந்த பாரதி கண்ணம்மா – நம்ம வீட்டு திருவிழா! ரசிகர்கள் உற்சாகம்!
இவர் கடந்த வருடம் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இருந்தார். அப்போது அவருக்கு பலரும் ஆதரவு மற்றும் ஆறுதல் அளித்து இருந்தனர். அதன் காரணமாக மீண்டும் நலம் அடைந்து இருந்தார். தற்போது அவருக்கு தொற்று பாதித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், அது குறித்து ஒரு பதிவினை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்டது என்றும் தான் அதில் இருந்து மீண்டு வந்து இருந்தாலும் தற்போது வரை தனக்கு உடல் வலி, சோர்வு மற்றும் ஸ்ட்ரெஸ் ஆகியவை இருக்கிறது. தனது எதிரி மற்றும் துரோகிக்கு கூட வர கூடாது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.