Post Office புதிய சேமிப்பு திட்டம் – ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2000 ரூபாய் வட்டி!
அஞ்சலகத்தில் அமலில் உள்ளது MIS புதிய சேமிப்பு திட்டம். இதில் ரூ.4 லட்சம் முதலீடு செய்து மாதம் 2000 வரை வட்டியை பெறலாம். இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி இப்பதிவில் காண்போம்.
அஞ்சல் நிலையம்:
இந்தியாவில் அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்குகள் மக்களிடம் நம்பக தன்மையை பெற்றுள்ளது. அஞ்சலங்கள் வங்கிகளை போன்று பொது மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பல முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம் என பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அஞ்சலகங்களில் உள்ள சேமிப்பு திட்டங்களில் ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத 10, 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – டிச.4 கடைசி நாள்!
அண்மையில் அஞ்சல் நிலைய கணக்குகளில் நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அஞ்சலகம் MIS முதலீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1000 ரூபாயை செலுத்தி இந்த அஞ்சலக கணக்கை தொடங்கலாம். இந்த திட்டம் ஐந்தாண்டுகளுக்கு நிலையான முதலீடு திட்டம். மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தி 4.5 லட்சம் முதல் அதிகபட்சம் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
தமிழகத்தில் 1591 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் – அரசாணை வெளியீடு!
இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு சந்தை நிலவரத்தை பொறுத்து வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. MIS திட்டத்தில் ஒருவர் 4 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் மாதந்தோறும் 2000 வட்டித்தொகை பெறலாம். இத்திட்டத்தின் காலம் முடிந்தவுடன் உங்கள் முதலீடு தொகையை நீங்கள் திரும்ப பெறலாம். குறைந்த பணத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளவர்களுக்கு பயனளிக்க கூடிய ஒரு நல்ல திட்டமாக MIS முதலீடு திட்டம் உள்ளது.