தமிழகத்தில் நாளை (நவ.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளை மின்தடை:
தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்பராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் அந்த பணிகளை மேற்கொள்ள முடியாத காரணத்தால் ஒருசில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணைமின் நிலையங்களிலும் மின்பழுது, மின்கம்பி மற்றும் மின்கம்பம் உள்ளிட்டவைகளில் உள்ள பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – டிசம்பரில் முடிவு? புதிய தகவல்!
அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் குறிப்பிட்ட துணைமின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தப்படும். அதனால் அந்த துணைமின் நிலையத்தின் கீழ் செயல்படும் அனைத்து பகுதிகளிலும் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை மின்வியோகம் இருக்காது. இத்தகைய மின்தடையானது குறிப்பிட்ட மின்வாரியத்தால் முன்கூட்டியே அறிவிக்கப்படும். அந்த வகையில் நாளை நவம்பர் 20ம் தேதி சென்னையில் மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!
அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடப்பேரி சிட்லம்பாக்கம் 2 & 3 வது மெயின் தெரு, நீதிபதி காலனி, பாலவிநாயகர் கோயில் தெரு, மீனாட்சி தெரு, பெரியார் தெரு 1 – 7வது குறுக்குத் தெரு வரை, ஐயப்பா தெரு, எஸ்.பி.ஐ காலனி பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேலும் காந்தி தெரு 1 & 2 குறுக்கு தெரு, அண்ணா தெரு, நேரு தெரு, பல்லாவரம் ரோடு, இந்திரா காந்தி ரோடு, ஒலிம்பியா புரம், மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.