தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ.19) விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று சென்னை புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதனால் தமிழகத்திற்கு நேற்று ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி முழுவதுமாக கரையை கடந்தால் தற்போது ரெட் அலர்ட் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதன் படி திருப்பத்தூர், சென்னை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, பெரம்பலூர், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
B.Ed பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – நவ.29 முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்!
மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இன்று கார்த்திகை தீபம் என்பதால் திருவண்ணாமலையில் மகர ஜோதி விழா சிறப்பாக நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்வார். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.