தமிழகத்தின் இம்மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.12) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் விடாது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் – கோரிக்கை முன்வைப்பு!
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பல நிவாரண பணிகளை செய்து வந்தாலும் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி இருப்பதால் மக்கள் தங்களது உடமைகளை இழந்துள்ளனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்றும் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Covaxin தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஹாங்காங் ஒப்புதல்!
அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணியை மீட்பு குழுவினர் துரிதமாக செய்து வருகின்றனர்.