தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் தமிழக அமைச்சர் அவர்கள் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால் காவல்துறையினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
காவலர்களுக்கு விடுமுறை:
நாடு முழுவதும் சட்ட ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் காவலர்களுக்கு விடுமுறை என்பது இல்லாத ஒன்றாகும். கால நேரம் என்பதும் அவர்களது பணியில் கிடையாது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் காவலர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது காவலர்களுக்கு விடுமுறை, பெண்காவலர்களுக்கு பணிச்சுமை குறைப்பு போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
டிச.8ல் TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!
இந்நிலையில் கடத்த ஜூலை மாதம் தமிழகத்தின் புதிய டிஜிபி ஆக சைலேந்திர பாபு அவர்கள் நியமிக்கப்பட்டார். சைலேந்திர பாபு அவர்கள் பதவியேற்ற பின்னர் காவலர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக தமிழகத்தில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அது மட்டுமல்லாமல் தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் பெண் காவலர்களை இரவு நேர சாலையோர ரோந்து பணியில் அமர்த்த கூடாது என்றும் அதிரடியாக அறிவித்திருந்தார்.
TNPSC குரூப் 4 VAO தேர்வு 2021 – தேர்வு முறைகள், பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!
இந்த அறிவிப்பானது பெண் காவலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் காவலர்களுக்கு 12 மணி நேர வேலையை குறைத்து 8 மணி நேர வேலையாக மாற்றி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. தற்போது 2-ம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஒய்வு அளிக்கும் வகையில் விடுமுறை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பு காவலர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது.