இன்று முதல் ATM இல் பணம் எடுக்க புதிய விதிமுறை – SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
நாடு முழுவதும் தற்போது சில காலங்களாக வங்கி கணக்குகளில் மோசடியாளர்கள் மூலம் நூதன கொள்ளை சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள்:
தற்போது வளர்ந்து விட்ட நவீன விஞ்ஞான உலகத்தில் அதிக அளவில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடக்கிறது. நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு, வங்கி நிர்வாகமும் நேரடி பண பரிவர்த்தனைகளை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சமீப காலத்தில் வங்கி நிறுவனங்களை போன்று வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்பி மோசடி செய்யும் கும்பல்கள் அதிகரித்துள்ளது.
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முதல் பருவ பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு!
இதனால் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. சமீப காலமாக மோசடி கும்பல்கள் வங்கி நிர்வாகத்தில் இருந்து பேசுவது போல் வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டு நம்பரை கேட்டு வாங்கி, அதன் மூலம் பணத்தை திருடி விடுகின்றனர். இதனால் வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து எந்த விதமான அழைப்புகளும் இருக்காது என்றும் ஏடிஎம் எண், CVV, PIN நம்பர் போன்ற தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள் – வேளாண் சட்டம்!
இது போன்ற மோசடி செயல்களை தவிர்ப்பதற்காக ஒரு புதிய வழிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பாரத ஸ்டேட் வங்கியில் 10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க ஓடிபி அனுப்பி வைக்கப்படுகிறது. அதனை பதிவிட்டால் மட்டுமே வெற்றிகரமாக பணத்தை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும், தேவையற்ற எந்த போலியான அழைப்புகள் மற்றும் செய்திகளை உடனடியாக அழித்து விடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.