நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள் – வேளாண் சட்டம்!
மத்திய அரசின் வேளாண் திட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லியில் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் இதுவரை வரை பின்வாங்காமல் தங்களது முடிவில் உறுதியாக இருந்து வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம்:
மத்திய அரசின் வேளாண் திட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 ம் தேதி முதல் டில்லியில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் போன்ற இடங்களை ஆக்கிரமித்து போராடி வருகின்றனர். அதனால் அந்த பகுதிகளை சுற்றி போலீசார் வேலிகள் அமைத்திருந்தனர். அதனால் அந்த பகுதிகளில் வாகன போக்குவரத்து பெரிய அளவில் பாதித்துள்ளது.
மாதம் ரூ.6000 முதலீட்டில் ரூ.72 லட்சத்திற்கு மேல் வருமானம் – Post Office திட்டம் முழு விபரம்!
இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடுவதற்கு உரிமை உண்டு. ஆனால் காலவரையறை இன்றி போக்குவரத்தை மறிப்பது குற்றமாகும் என்று கூறியுள்ளனர். அதனை தொடந்து அங்கு போடப்பட்ட கம்பி வேலிகள், கான்கிரீட் சுவர்கள் மற்றும் இரும்பு ஆணிகள் என அனைத்தையும் ஜே.சி.பி எந்திரங்கள் பயன்படுத்தி போலீசார் அகற்றிவிட்டனர். அதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து சீராக அமைந்து வருகிறது.
தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு சம்பளம் – முதல்வர் கடிதம்!
அதனை தொடர்ந்து டெல்லி போலீசாருடன், துணை ராணுவமும் சேர்ந்து பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது. வேலிகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து விவசாயிகளை அப்புறப்படுத்த கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களை தானிய கிடங்குகளாக மாற்றி விடுவோம் என்று ‘பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத்’ விவசாய அமைப்பு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருப்பது உணர்த்தியுள்ளார்.