சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நவ.5ம் தேதி தீபாவளி விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 5ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
விடுமுறை:
தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். தொற்று முழுமையாக குறையாத நிலையில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அரசு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள மிக பெரிய காய்கறி சந்தை கோயம்பேடு மார்கெட்டிற்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5 ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை – கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கான அரசாணை வெளியீடு!
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்குக்கும் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மக்களின் தேவைக்காக கோயம்பேடு மார்க்கெட் இயங்கியது. இதனால் ஏராளமான விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டனர். கோயம்பேடு மார்க்கெட் கொரோனா பரவல் மையமாக மாறியது. அதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
லோக்கல் சேனல் ஆங்கர் டூ சன்டிவி ஹீரோயின் – கண்ணான கண்ணே நிமிஷிகாவின் உண்மை கதை!
அதனை தொடர்ந்து தற்போது இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 5 ம் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பண்டிகை தினத்தை முன்னிட்டு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் நோய் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.