இந்திய கிறித்துவ திருமண சட்டத்தின் உண்மை வடிப்புகள் – தமிழக அரசின் புதிய அரசாணை வெளியீடு!
இந்திய கிறித்துவ திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமண சான்றின் உண்மை வடிப்புகள் வழங்கும் அதிகாரத்தினை மண்டல துணை பதிவுத்துறை தலைவருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கிறித்துவ திருமணச் சான்று:
இந்தியாவில் பதிவு திருமணம் என்பது சமீப காலமாக நடைபெற்று வருகிறது. அது இந்து திருமணம், கிறித்துவ திருமணம், இசுலாமிய திருமணம் என எதுவாக இருந்தாலும் அதனை பதிவு செய்ய வேண்டும். திருமண பதிவு என்பது அரசு அதிகாரிகள் முன்பு நடத்தி வைக்கப்படுவது ஆகும். திருமணம் எப்படி நடந்திருந்தாலும் திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் அதனை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்திய கிறித்துவ திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமண சான்றிதழ்கள் பதிவு மேற்கொண்ட அலுவலகத்தில் பெற முடியாது.
தமிழகத்தில் ஒருநாள் பள்ளிக்கு வந்தால் மறுநாள் விடுமுறை – கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்!
அதாவது, கிறித்துவ திருமணம் நடந்த விபரங்கள் அந்தந்த மாவட்ட பதிவாளர்களால் பெறப்பட்டு, சென்னையில் இருக்கும் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தொடர்ந்து கிறித்துவ திருமண பதிவு வடிப்புகளின் சான்றிட்ட நகல்கள் இதுவரை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. அதனால் ஒவ்வொருவரும் சென்னைக்கு சென்று திருமண பதிவு வடிப்புகளை பெற்று வரவேண்டிய சூழ்நிலை நிலவியது. இந்த நடைமுறையை எளிமைபடுத்தும் விதமாக 9 மண்டல துணை பதிவுத்துறை தலைவர்களிடம் இந்த கிறித்துவ திருமண வடிப்புகளை வழங்கும் விதமாக கிறிஸ்துவ திருமண சட்டம் 1872- ல் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பிற விவரங்கள் இதோ!
இதனால் தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் கிறித்துவ திருமண உண்மை வடிப்புகளை பெறுவதற்கு சென்னை வருவது குறையும். இதனை கருத்தில் கொண்டு திருத்தம் மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்திய கிறித்துவ திருமண சான்றின் உண்மை வடிப்புகளை அந்தந்த மண்டல துணை பதிவுத்துறை அலுவலர் வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு திருத்தம் செய்யப்பட்டதற்கான அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.