தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – ரூ. 15 கோடி மோசடி, அமைச்சர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தவறு செய்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.
மோசடி:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அதன்படி நகை கடன் தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன்களை தள்ளுபடி செய்ய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை கூட்டுறவுத்துறை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு விளக்கம்!
இந்த ஆய்வில், கடந்த அதிமுக அரசின் ஆட்சியின் போது ஏழை எளிய மக்களுக்கான நகை கடன் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 247 நகை பொட்டலங்கள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கக்கூடிய அந்தி யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களது பெயரில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்ததாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசுத்தொகையுடன் பேச்சுப்போட்டி – நவ.12 இல் நடைபெறும்!
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியதாவது, கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டதில் ஏறத்தாழ குறைந்தபட்சம் 15 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக கூறியுள்ளார். நகைக்கடனில் மோசடி செய்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர் தவறு செய்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டுறவு துறையில் காலிப்பணியிடங்கள் தீபாவளி முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.