தீபாவளி பண்டிகை : தமிழக அரசு போக்குவரத்து துறையின் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதில் சிக்கல் என கூறப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்து துறை அதற்கான தகுந்த விளக்கத்தினை தந்துள்ளது.
சிறப்பு பேருந்து:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலில் மக்கள் பயணம் செய்வதால் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்பதால் அதனை கட்டுப்படுத்த சிறப்பு பேருந்து இயக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் என செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களில் கூறப்பட்டு வந்தது.
மத்திய அரசு வழங்கும் ரூ.12,000 உதவித்தொகை – PM கிசான் விவசாய திட்டத்தின் நன்மைகள்!
இதுகுறித்து போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் டயர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் தீபாவளிக்கு தடையில்லா பேருந்து சேவைகளை முழுமையாக வழங்க சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் மற்றும் பிற போக்குவரத்து கழகங்கள் இயலாத நிலை ஏற்படும் என செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தற்போதைய நிலவரப்படி புதிய டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்களின் தற்போதைய இருப்பு நிலை, போக்குவரத்துகழகங்கள் அனைத்து பேருந்துகளையும் இயக்க தேவையான டயர் ஃப்ளோட்டை விட அதிகமாக இருப்பதால் தடையின்றி பேருந்துகளை இயக்க முடியும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 15,997 புதிய டயர்கள் மே 2021 முதல் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது என்றும் மேலும் 1,000 டயர்கள் போக்குவரத்துக்கழகங்களுக்கு இந்த வாரம் சென்றடையும் நிலையில் உள்ளது என்றும் கூறிய அவர் சிறப்பு பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்கள் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.