மத்திய அரசு வழங்கும் ரூ.12,000 உதவித்தொகை – PM கிசான் விவசாய திட்டத்தின் நன்மைகள்!
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் பலன்கள் தீபாவளியை முன்னிட்டு இரட்டிப்பாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி பரிசு:
நாட்டில் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வை முன்னேற்றுவதற்கும் மத்திய அரசு பல திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. 2018ம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. சுமார் 11 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். நாட்டில் நலிந்த விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படும். மத்திய அரசு விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கில் இந்த தொகையை வழங்கும்.
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதன்மூலம் இதுவரை சுமார் 1.58 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 9 தவணை நிதியானது வழங்கப்பட்டு உள்ளது. 10-வது தவணை நிதியை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான தேதியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 15 ம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 10-ஆம் தவணை வழங்கப்பட உள்ளது. இதற்காக அக்டோபர் 30ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், பீகார் விவசாய அமைச்சரான அமரேந்திர பிரதாப் சிங், மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை நேரில் சந்தித்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியை இரட்டிப்பாக்க கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதனால் மத்திய அரசு விவசாயிங்களுக்கான நிதியுதவியை இரட்டிப்பாக்கினால் அவர்களுக்கு இதுவரை ஆண்டு ஒன்றிற்கு கிடைத்து வந்த ரூ.6000 நிதியானது, ரூ.12,000-ஆக உயரும். இதனால் விவசாயிகள் அதிக பலனடைவார்கள். எனவே, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியினை இரட்டிப்பாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பீகார் அமைச்சர் அமரேந்திர பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முதல் மூன்று தவணைக்கு பின் எனக்கு கிடைக்க வேண்டிய 6 தவணைப்பணம் எங்கே உள்ளது என்று தெரியவில்லை 10 வது தவனையும் வரப்போகிறது நடந்தும் கடிதங்கள் எழுதியும் யாதொரு முன்னேற்றமும் இல்லை இது தான் இந்திய விவசாயிகள் நிலைப்பாடு.