தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு – நவ.10 கடைசி நாள்!
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த அக்.21ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் அதிக அளவிலான மாணவர்கள் மருத்துவத் துறையை தேர்வு செய்கின்றனர். அதனால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று மாணவர்கள் அந்த தேர்வை எழுதினார்கள். கடந்த வாரத்தில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகள் – ஆணையர் முக்கிய அறிவிப்பு!
இந்த அறிவிப்பானது மருத்துவ படிப்பில் சேர விரும்பி நீட் தேர்வில் தோல்வி பெற்ற மாணவர்களுக்கு அடுத்தகட்ட ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.எஸ்சி-யில் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதாவது பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்., ரேடியோகிராபி, ஆப்தொமெட்ரி, ஆக்குபேஷனல் தெரபி, பிசியோதெரபி (பி.பீ.டி), நியூரோ டெக்னாலஜி, பெர்பியூஷன் டெக்னாலஜி, ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, டயாலிசஸ் டெக்னாலஜி, ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லேங்குவேஜ் பெதாலஜி, ரெஸ்பிரேடரி தெரபி, கார்டியோ வாஸ்குலர் டெக்னாலஜி, அனஸ்திஸ்யா டெக்னாலஜி போன்ற 19 வகையான துணை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை – புதுச்சேரி நிர்வாகம் அறிவிப்பு!
அதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் நவ.8-ம் தேதி மாலை 5 மணி வரை http://tnhealth.tngov.in மற்றும் http://tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளா், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியாா் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010 என்ற முகவரியில் நவம்பா் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Very useful message our children and public.conntetued your job susscessfully.Take care