தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகள் – ஆணையர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர்களை பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு நடவடிக்கை:
நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டின் இறுதி முதல் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை – புதுச்சேரி நிர்வாகம் அறிவிப்பு!
தற்போது கொரோனா பரவும் விதம் கணிசமாக குறைந்து வரும் நிலையில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களை பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
இதில் புதிதாக அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். எமிஸ் தளத்தில் விடுபட்ட மாணவர்களின் ஆதார் எண்ணை உடனடியாக பதிவேற்றம் செய்வது அவசியம் என்றும் கூறியுள்ளார். நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை கண்டறிந்து அங்கு மாணவா் சோ்க்கையை அதிகரிக்க தேவையான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனவும், மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் உபரி ஆசிரியா்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் வேண்டும் வேண்டும் கூறியுள்ளார்.
மேலும் பெரம்பலூர், சேலம் கல்வி மாவட்டங்களில் ஆசிரியர்கள் வருகைப்பதிவு அதிகரித்துள்ளது. அதே வேளையில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், திண்டிவனம் மாவட்டங்களில் ஆசிரியர் வருகைப்பதிவு குறைவாக உள்ளது என்றும், இதை கண்காணித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தற்போது தேவகோட்டை, குழித்துறை, திருப்பூர் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
F.R.I.E.N.D.S பிரபல நடிகர் ஜேம்ஸ் மைக்கேல் டைலர் மறைவு – ரசிகர்கள் இரங்கல்!
எனவே அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களும் தங்களது மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட அனுமதிக்க கூடாது என்றும் அவ்வாறு செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் பேனர் வைத்து அந்த பள்ளிகளில் எந்த ஒரு மாணவரும் சேராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.