அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை – புதுச்சேரி நிர்வாகம் அறிவிப்பு!
வரவிருக்கும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கான இடைக்கால ஊக்கத்தொகையை தீபாவளி போனஸாக வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி போனஸ்
வழக்கமாக ஒவ்வொரு பண்டிகை காலத்தின் போது ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை பரிசாக வழங்கப்படுவது உண்டு. அந்த வகையில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனுடன் மத்திய அரசுத்துறை ஊழியர்களுக்கும் தீபாவளி பரிசாக 3% DA உயர்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி – மாநில முதல்வர் உத்தரவு!
இந்நிலையில் தமிழகத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அளிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவுத்துறை ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ‘மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கடந்த 2020-21ம் நிதியாண்டுக்கான இடைக்கால ஊக்கத்தொகையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் படி கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 6 மாத காலம் பணியில் இருந்த ஊழியர்களுக்கு உதவித்தொகை கொடுக்கப்படும். இந்த ஊக்கத்தொகைக்கான உச்ச வரம்பு ரூ.7,000 ஆகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் புதுச்சேரியை சேர்ந்த அரசுத்துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் புதுச்சேரி அரசின் C மற்றும் B பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களுக்கு ரூ.6,908 ஆகவும், முழுநேரம் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 பரிசாக வழங்கப்படும் என நிதித்துறை சார்பு செயலர் கோவிந்தராஜன் அவர்கள் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகையின் மூலம் சுமார் 26 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி போனஸ் தொகையின் மூலம் அரசுக்கு ரூ.18 கோடி செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.