![தமிழகத்தில் தீபாவளி முடிந்த பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழகத்தில் தீபாவளி முடிந்த பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/10/தமிழகத்தில்-தீபாவளி-முடிந்த-பிறகு-மாணவர்கள்-பள்ளிக்கு-வரலாம்-.jpg)
தமிழகத்தில் தீபாவளி முடிந்த பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில் தீபாவளி முடிந்த பிறகு மாணவர்கள் விருப்பப்பட்டால் வரலாம் என்று அறிவித்துள்ளார்.
மாணவர் வருகை:
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக்கல்வி முறை பின்பற்றப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் பல மாதங்களாக பள்ளிக்கு நேரில் வராத காரணத்தால் கற்றல் அடைவுகளில் பாதிப்புகள் அடைந்துள்ளனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் புதிய கண்ணம்மா இவர் தானா? இணையத்தில் கசிந்த தகவல்!
இதனால் விரைவில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தது. இதனால் அரசு முதல்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறந்தது. தொடர்ந்து ஆரம்ப நிலை வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்துதல்கள் அரசுக்கு வந்தது. இதனால் தீவிர ஆலோசனைக்கு பிறகு 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் திங்கட்கிழமை (அக்.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ஆனால் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால் அதன் பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று உறுதியாக கூறினார். இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் வரலாம் என்று அறிவித்துள்ளார்.