தமிழகத்தில் நாளை (அக்.6) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தருமபுரி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் கிருஷ்ணாபுரம் பகுதிகளில் புதிய மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
மின்தடை அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனை தொடர்ந்து மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் 14ம் தேதி ஆயுத பூஜை – மஞ்சள் சந்தைக்கு 6 நாட்கள் விடுமுறை!
கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து தருமபுரி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் கிருஷ்ணாபுரம் பகுதிகளில் புதிய மின் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
- கிருஷ்ணாபுரம்
- புழுதிக்கரை
- பி.மோட்டுப்பட்டி
- காட்டம்பட்டி
- சி.மோட்டுப்பட்டி
- வகுத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.