இன்று முதல் ஜனவரி 2022 வரை பட்டாசுகள் விற்க, வெடிக்க தடை – மாநில முதல்வர் உத்தரவு!
இராஜஸ்தானில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
பட்டாசுக்கு தடை:
இந்தியாவில் வரும் மாதங்களில் தீபாவளி மற்றும் தசரா போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருகிறது. இத்தகைய பண்டிகைகள் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளாகும். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவியதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து பண்டிகைகள் ஏதும் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து வரும் மாதங்களில் தீபாவளி மற்றும் தசரா பண்டிகைகள் வரவிருப்பதால் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு பண்டிகை நாட்களில் மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா மேலும் பரவும் என்பதன் அடிப்படையில் தேவைப்பட்டால் 144 தடை பிறப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு தீபாவளி பண்டிகை அன்று காலை 1 மணி நேரமும், மாலை 1 மணி நேரமும் என மொத்தம் 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இராஜஸ்தான் மாநிலத்திலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி EMI ஆட்டோ டெபிட் வரை – இன்று முதல் வரப்போகும் மாற்றங்கள்!
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் பட்டாசு புகையால் மேலும் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதற்காகவும், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் பட்டாசுகளில் இருந்து வெளிவரக்கூடிய புகை காரணமாக அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவும் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அக்.1ம் தேதி அதாவது இன்று முதல் அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக உள்ளது.