தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வரும் நிலையில், பள்ளிகள் திறக்கும் முடிவு இன்னும் சில காலம் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டது. ஆனால் பள்ளிகளை திறந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே மாணவ, மாணவிகள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் சில நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அக்.1 முதல் அரசு AC பேருந்துகள் இயங்க அனுமதி – அமைச்சர் அறிவிப்பு!
இதனிடையே 1 முதல் 8ம்வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து அரசு பல கட்டமாக ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை தொடர்பான அறிக்கைகளும் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
அதாவது, பெற்றோர்களிடையே இதுவரை கொரோனா தொற்று குறித்த அச்சம் காணப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதனால் இன்னும் சில நாட்களுக்கு பள்ளிகளை திறக்கும் முடிவு ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் நேற்று (செப் 23) ஒரே நாளில் 1745 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் குறிப்பாக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 81 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் – முதன்மைச் செயலர் உத்தரவு!
அந்த வகையில் கொரோனா 2 ஆம் அலை தொற்று இன்னும் சற்று குறைந்தவுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என தெரிகிறது. இது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் கூறுகையில், அக்டோபர் முதல் வாரத்தில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கலாம் என தெரிவித்துள்ளனர். என்றாலும் இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.