தமிழகத்தில் இன்று மட்டும் 1,669 பேருக்கு கொரோனா உறுதி; பலி எண்ணிக்கை 17- சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பல நாட்களுக்கு பின்னர் நேற்று சற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்து உள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று மட்டும் புதிதாக 1669 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் பாதிப்பு உச்சத்தில் இருந்து கடந்த மாதம் முதல் குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனால் திடீரென்று நேற்று ஒரே நாளில் 1,693 பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு மீண்டும் அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில், சுகாதாரத்துறை தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
“இந்த வீட்ல கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு” – பிக் பாஸ் 5 ப்ரோமோ வெளியீடு!
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தமிழகத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,42,030 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 17 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,288 ஆக உள்ளது. இன்று 25 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இன்று 1,565 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதுவரை தமிழகம் முழுவதும், 25,89,899 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 16,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,56,804 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை 4,49,88,345 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தலைநகரான சென்னையில், இன்று புதிதாக 196 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை சென்னையில் மொத்தம் 547268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.