கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பக்க விளைவுகள்!
இந்தியாவில் அதிகப்படியான மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் வரும் என்பதை இப்பதிவில் காண்போம்.
கோவிஷீல்டு :
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் 18 வயது மேற்பட்டோர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி நல்ல பலனை அளிக்கிறது. இதுவரை இந்தியாவில் 77,24,25,744 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு? விரைவில் DA அதிகரிப்பு!
இந்த நிலையில் தடுப்பூசிகள் செலுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்று மக்கள் கூறி வந்தனர். அதனால் தடுப்பூசிகள் செலுத்திய பிறகு ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு உடல் வலி , காய்ச்சல் , தலைவலி போன்ற விளைவுகள் ஏற்பட்டு வருகிறது. , கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மூக்கு மற்றும் மூக்கை பாதிக்கும் சில அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் செப்.18ம் தேதி சூலூர், உக்கடம் பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு சிலருக்கு குமட்டல் உணர்வு அதனை தொடர்ந்து வாந்தி போன்ற அறிகுறிகுறிகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சிலர் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு பசியின்மை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கோவிஷீல்டு செலுத்திய பிறகு ஓரிரு வாரங்களுக்கு பசியின்மை இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அறிகுறிகளை குறைக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்