தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!
தமிழகத்தில் தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (செப்டம்பர் 16) முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறிக்கை சமர்ப்பிப்பு
கொரோனா 2 ஆம் அலை பரவல் தொற்றுக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் தற்போது பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நடைமுறைகளின் படி, ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டும் கலந்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக வாரத்தின் 6 நாட்களும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
நாட்டில் அதிகம் தடுப்பூசி செலுத்தி கொண்டது யார் – ஆண்களா? பெண்களா?
இதற்கிடையில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில தினங்களில் இருந்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி கொரோனாவால் பாதிக்கப்படும் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்குவது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
உலகளவில் செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் – பிரதமர் மோடி, மம்தா பானர்ஜிக்கு இடம்!
அந்த வகையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நேற்று (செப்டம்பர் 15) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிற்பாடு பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (செப்டம்பர் 16) முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக உரிய ஆலோசனைகளை செய்த பிற்பாடு பள்ளிகளை திறப்பது குறித்த முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.