ரயில் பெட்டிகள் தனியாருக்கு குத்தகை, விற்பனை – மத்திய ரயில்வே துறை திட்டம்!
மத்திய ரயில்வே அமைச்சகம் ரயில் பெட்டிகளை தனியாருக்கு குத்தகைக்கு மற்றும் விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ரயில்வே துறை:
நாட்டில் வாராக் கடன் நிலுவைகளை சரி செய்வதற்காக மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவு குறித்து பல தரப்புகளில் இருந்தும் புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், ரயில்வே துறை புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, பெட்டிகளுடன் கூடிய ரயில்களை தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்வதற்கும், குத்தகைக்கு விடுவதற்கும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
பொருளாதார இழப்பில் இருந்து விரைவில் மீண்ட இந்தியா – பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி!
இதன் மூலம், சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டு உள்ளது. கலாசாரம், மதம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமாக ரயில்களை இயக்க விரும்பும் நிறுவனங்களுக்கு இந்த ரயில்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குத்தகைக்கு எடுக்கப்படும் ரயில் பெட்டிகளில் சிறியளவிலான மாற்றங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 16 பெட்டிகளுடன் உள்ள ரயிலை மட்டுமே விலைக்கு வாங்கவோ அல்லது குத்தகைக்கு பெறவோ முடியும்.
TN Job “FB Group” Join Now
குறைந்தது 5 ஆண்டுகள் முதல் ரயிலின் ஆயுள் காலம் வரை குத்தகையை நீடிக்க முடியும். ஆர்வம் உள்ளவர்களுக்கு தகுதி அடிப்படையில் எளிமையான பதிவு முறை மூலம் வாய்ப்பு வழங்கப்படும். குத்தகை கட்டணம் உட்பட இதர நியாயமான கட்டணங்களை ரயில்வே வாரியம் விதிக்கும். இந்த சுற்றுலா ரயில் திட்டங்களுக்கான கொள்கைகள், விதிமுறைகள், நிபந்தனைகளை உருவாக்க, நிர்வாக இயக்குனர் அளவிலான குழுவை ரயில்வே அமைச்சகம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.