பொருளாதார இழப்பில் இருந்து விரைவில் மீண்ட இந்தியா – பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி!
இந்தியா கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீளும் சமயத்திலேயே விரைவில் பொருளாதார பாதிப்புகளில் இருந்தும் மீண்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பொருளாதரம்:
கடந்த 2020 முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடந்த வருடம் நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் முடங்கியது. தொழில்கள் முடங்கியதால் மக்கள் பலவகைகளிலும் பாதிக்கப்பட்டனர். அரசின் பொருளாதாரம் மிகவும் சரிவடைந்தது. தொடர்ந்து 2ம் அலையின் பாதிப்பு நடப்பாண்டில் அதிகரித்த போதும், அரசு தொழில்களை முடக்க வில்லை.
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொழில்கள் இயங்க அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், இன்று பிரதமர் மோடி குஜராத்தின் அகமதாபாத் நகரில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது, பல விஷயங்களையும் குறித்து பேசினார். அதில், கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் மற்றும் மொத்த கொள்முதல் உற்பத்தி கடுமையாக சரிந்து இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் பல கொரோனா தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கும் வேளையில் இந்தியா பொருளாதார சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
அதிலும்,ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சூரத் தொழிற்சாலைகள் இந்த ஆண்டு வணிகத்தில் சிறந்து விளங்குவதாகவும், ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் வளர்ச்சி கண்டுள்ளதை அடுத்து தற்போது தேசிய புள்ளியியல் அலுவலகம் அளித்த தகவலின்படி இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் இந்திய பொருளாதாரம் 20.1 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் மொத்த கொள்முதல் உற்பத்தி 24.4 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது என்றும், 21ம் நூற்றாண்டில் தலைசிறந்த பொருளாதார வளர்ச்சிகண்ட நாடாக திகழும் இந்தியாவில் தொழில் வாய்ப்புகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை என்று பிரதமர் பெருமிதம் அடைந்துள்ளார்.