தமிழக பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. அப்போது சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி என்ற பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பின் பொது தொலைபேசி வழியாக மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் வந்தது. இதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இது போன்ற குற்றங்களை விசாரிக்க பள்ளிகளில் மாணவர்களுக்காக தனிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவர்கள் அச்சம்!
மேலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 முதல் 22ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வெகு நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இரவு, வார இறுதி ஊரடங்கு & தீவிர வழிகாட்டு நெறிமுறைகள் அமல் – மாநில வாரியாக முழு விபரம்!
பாலியல் தொந்தரவுகளிலிருந்து பள்ளி மாணவிகளை பாதுகாக்க உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்கு பெண் காவல் கண்காணிப்பாளர், சமூக பாதுகாப்பு அலுவலர், சட்ட அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் வல்லுநர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும். பள்ளிக்கு அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணை பள்ளிகளில் எழுதி வைத்தல் வேண்டும் போன்ற பணிகளை பள்ளிகள் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.