தமிழக பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவர்கள் அச்சம்!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதன் காரணமாக பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிபயங்கரமாக பரவியது. தமிழகத்தில் நோய்த்தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவீச்சில் அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது.
இரவு, வார இறுதி ஊரடங்கு & தீவிர வழிகாட்டு நெறிமுறைகள் அமல் – மாநில வாரியாக முழு விபரம்!
தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமூக இடைவெளி முதலிய கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் பாலோவர்ஸ் – விராட் கோஹ்லி புதிய சாதனை!!
இந்நிலையில் ஓய்வறையில் அமர்ந்து இருந்த இடைநிலை ஆசிரியை திடீரென வாந்தி எடுத்ததால் அவர் தனியாக அமர வைக்கப்பட்டார். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து 11 மணி அளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது ஆசிரியை அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் சுகாதார நடவடிக்கை மற்றும் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.