‘நாம் இருவர் நமக்கு இருவர்’ பிரபல நடிகருக்கு ஆண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியல் நடிகர்
விஜய் டிவியில் பல ட்விஸ்ட்கள் கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’. இந்த சீரியலில் நடிகர் செந்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் தான் பல சண்டை காட்சிகள், திரில் என விறுவிறுப்பான கதைக்களம் இடம் பெற்று வருகிறது. முத்துராசு கொலை வழக்கு என்று ஆரம்பித்து தற்போது மாயன்-மாறன் சகோதரர்கள் சண்டை என்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான், நடிகர் சசிந்தர்.
‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கியின் முதல் திரைப்படம் – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
இவர் போலீஸ் அதிகாரி கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முத்துராசு கொலை வழக்கின் போது அனைவரையும் கதி கலங்க வைத்தவர் தான் இவர். இவர் இதற்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “தமிழ் கடவுள் முருகன்” தொடரில் சிவனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார். தொடர்ந்து அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
TN Job “FB Group” Join Now
தற்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தை மற்றும் மனைவியுடன் தான் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். சசிந்தர் கைக்குள் தனது மனைவி மற்றும் குழந்தை இருவரது கை இருப்பது போல உள்ளது அந்த புகைப்படம். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை இவருக்கு தெரிவித்து வருகின்றனர்.