Tokyo Paralympics 2020 – பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் பிரமோத் பகத்!
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில், பேட்மிண்டன் பிரிவில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட வீரர் பிரமோத் பகத் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று பதக்கத்துக்கான அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அரையிறுதிக்கு தகுதி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாத இறுதியில் துவங்கிய இந்த பாராலிம்பிக் போட்டிகள் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. உலக நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இப்போட்டிகளில் இந்தியா சார்பிலும் சுமார் 54 வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெற்று வருகின்றனர்.
பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவ அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதுவரை நடைபெற்ற ஒவ்வொரு நாள் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் போட்டிகள் துவங்கிய 10 ஆவது நாளான இன்று (செப்டம்பர் 10), ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒலக்சாண்டர் சிர்கோ என்பவரை எதிர்கொண்டார். இதில் 21-12, 21-9 என்ற செட் கணக்கில் ஒலக்சாண்டர் சிர்கோவை வீழ்த்தி, அறையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதற்கு முன்னதாக நடைபெற்ற அறிமுக போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரரான பிரமோத் பகத் பேட்மிண்டன் ஆண்களுக்கான A பிரிவு ஒற்றையர் லீக் ஆட்டத்தில், இந்தியாவை சேர்ந்த மனோஜ் சர்காரை 21-10, 21-23, 21-9 என்ற செட் கணக்கில் தோற்கடித்திருந்தார். இந்நிலையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள பகத், ஆண்கள் ஒற்றையர் SL 3 பேட்மிண்டன் பிரிவில் வெற்றி பெற்றால் பதக்கத்தை உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.