வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் கவனத்திற்கு – காவல்துறை ஆணையர் உத்தரவு!
சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் தங்களது வாடகைதாரர்கள் தொடர்புடைய விவரங்களை வரும் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதிக்குள் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வாடகைதாரர் விவரம்
பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அதிகம். அதாவது பணி நிமித்தமாக வெளி ஊர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள், படிக்க செல்லுபவர்கள் என பலரும் வாடகை வீடுகளில் தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாநகரங்களில் மக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு வாடகைதாரர்களின் விவரங்களை அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் அமலில் இருக்கும் நிலையில், சென்னையில் வாடகை வீடுகளை வைத்திருப்பவர்கள் அந்த வீட்டில் குடியிருக்கும் நபர்களது பெயர், புகைப்படம், நிரந்தர முகவரி போன்ற தகவல்களை அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என சென்னை மாவட்ட காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல்கள் அனைத்தும் காவல் நிலையங்கள், துணை ஆணையர்களின் அலுவலகங்கள், ஆணையர் அலுவலகத்தில் உள்ள உளவுப்பிரிவு துறைகளில் கணிப்பொறிகளில் பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
அதனால் மேற்கூறிய தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் வரும் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்களில் தெரிவித்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு செய்துள்ள ஒப்பந்தம் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.