Tokyo 2020 Paralympic: மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனைகள் தோல்வி!!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாராலிம்பிக்ஸில் மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் :
கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஒலிம்பிக் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் இந்திய அணி சார்பில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் தற்போது பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
Tokyo Paralympics 2020: தங்கம் வெல்வாரா தமிழக வீரர் மாரியப்பன்? மக்கள் எதிர்பார்ப்பு!
இப்போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.தற்போதுவரை இந்தியா இரண்டு தங்கம், 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் டேபிள் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை யிங் சூவை வெற்றி பெற்றார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டி நடைபெற்றது, அதில் இந்தியா சீனா இடையே போட்டி நடைபெற்றது. காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்துள்ளார். சீனா வீராங்கனைகளிடம் 0-3 என்ற கணக்கில் இந்தியாவின் பவினாபென், சோனல்பென் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர். இன்னும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.