ஆப்கனில் இருந்து நாளை முழுமையாக வெளியேறும் அமெரிக்க படை – காலஅவகாசம் நிறைவு!
ஆப்கனில் கடந்த 20 வருடங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் தலிபான்களின் ஆதிக்கத்தினால் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்க படை:
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க நேட்டோ கூட்டுப் படைகள் ஆப்கனில் தலிபான்களை எதிர்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அங்கு தலிபான்களின் ஆதிக்கம் சற்று குறைந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றதில் இருந்து அமெரிக்க வீரர்களை ஆப்கானில் இருந்து படிப்படியாக வெளியேற்றி வருகிறார். தாலிபான்களுடன் ஒப்பந்த அடிப்படையில் தாங்கள் ஆப்கனை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்தார்.
தமிழக பள்ளிகளுக்கான கால அட்டவணை வெளியீடு – மாணவர்கள் கவனத்திற்கு!
இதனால் தலிபான்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஆப்கனில் இருக்கும் அமெரிக்க படையினர் வெளியேற அவகாசம் அளித்தனர். நாடுகளை சேர்ந்தவர்களும் ஆப்கனை விட்டு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேறுமாறு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கனில் உள்ள தங்கள் நாட்டினரை தாயகம் திரும்புவதற்கு ஏதுவாக விமானங்களை இயக்கி வந்தனர். இதுவரையிலும், பல லட்சக்கணக்கான மக்கள் ஆப்கனை விட்டு வெளியேறி உள்ளனர். மேலும், தலிபான்களின் ஆட்சியை எதிர்க்கும் ஆப்கன் நாட்டினரும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
ஆகஸ்ட் 14ம் தேதி முதல் அமெரிக்க படையினர் ஆப்கனை விட்டு வெளியேறி நிகழ்வுகள் வருகின்றது. தற்போது வரை 1,20,000 மக்களை அமெரிக்க படையினர் வெளியேற்றி உள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கடந்த சனிக்கிழமை வெளியேற்றப்பட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தங்கள் படையினர் நாடு திரும்ப இலக்கு நிர்ணயித்திருந்தார். நாளையுடன் இந்த அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள எஞ்சியுள்ள அமெரிக்க படை வீரர்களும் நாடு திரும்ப ஆயத்தமாகி உள்ளனர்.