தமிழகத்தில் ஆகஸ்ட் 28ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னை பராமரிப்புப் பணி காரணமாக நாளை (27.08.2021) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை :
தமிழகத்தில் கடந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மின் ஊழியர்கள் மூலமாக துணை ,மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. மேலும் மின் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் தொடர்பான பிரச்சனைகள் 2 நாட்களில் சரி செய்யப்படும் என்று மின்சாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு – இன்றே கடைசி நாள்!
அதனை தொடர்ந்து மாதந்தோறும் மாவட்டம் வாரியாக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை சென்னையில் கோயிலம்பாக்கம் – எஸ். கொளத்தூர் மெயின் ரோடு, சத்யா நகர், காந்தி நகர், வாட்டர் கம்பெனி கே.பி.ஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பொன்னியம்மன் மெயின் ரோடு, சின்னப்பா நகர், விடுதலை நகர், ராஜா நகர் புது கிருஷ்ணா நகர், ஸ்ரீராம் நகர், விஷ்ணு நகர், மல்லிகா நகர், ரமணி நகர், சக்தி நகர், பாலகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே போல் கிண்டி பகுதியில் லேபர் காலனி, கிண்டி தொழிற்சாலை , பாலாஜி நகர், ஈக்காட்டுதாங்கல், சர்தார் காலனி, தெற்கு பேஸ் பகுதி, கணபதி காலனி, ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை( 27.08.2021) மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.