தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு – இன்றே கடைசி நாள்!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த ஆண்டுகளுக்கான பதிவை புதுப்பிக்க இந்து சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிப்பு:
அரசு வேலை என்பது அனைவரின் கனவு. ஆனால் அதனை பெற இன்று பல்வேறு போட்டிகளையும், தேர்வுகளையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கான முன்னுரிமையை பெற்றுத்தருவது பதிவு மூப்பு எனும் வேலைவாய்ப்பு பதிவு தான். படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தால் அரசு பணியிடங்களில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்கும்.
அடுத்த 2 மணி நேரத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!
அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு அதில் நல்ல மதிப்பெண் பெற்று, தேர்ச்சி அடைந்து நேர்காணலுக்கு அழைக்கப்படுவது வழக்கம். அப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த பதிவு மூப்பு பட்டியலில் நமது பெயரும் இருந்தால் அதற்கான முன்னுரிமையுடன் அரசு பணியை பெற முடியும்.குறிப்பிட்ட சில பணிகளுக்கு நேரடியாகவே வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு பட்டியலில் இருந்து ஆட்கள் நியமனம் செய்யப்படுவதும் உண்டு.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், ஈரோடு மாவட்டதைச் சேர்ந்தவர்கள் கடந்த 2017, 2018, மற்றும் 2019ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் பதிவை புதுப்பிக்க ஒரு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சலில் விண்ணப்பித்து புதுப்பிக்கலாம் அல்லது http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் இன்றே இந்த வாய்ப்பிற்கு இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.