விஜய் டிவி VJ அர்ச்சனாவின் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நிலை – ரசிகர்களுடன் பகிர்வு!
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தார். அந்த காயம் இன்னும் ஆறாததால் மீண்டும் தனது பணியை துவங்க ஒரு சில மாதங்கள் ஆகும் என நேரலை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை
சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான அர்ச்சனா கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜே ஆக நீடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் இவரது தொகுப்பாளினி பயணம் விஜய் டிவியில் ஆரம்பித்து ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நீண்டு கொண்டே போனது. சுட்டித்தனமான பேச்சாலும், குறும்பாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிலையில் தான் அர்ச்சனாவுக்கு விஜய் டிவியின் பிராண்ட் ஷோவான பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
IND vs ENG 3வது Test – கேஎல் ராகுல் மீண்டும் ஏமாற்றம்! தடுமாற்றத்தில் இந்திய அணி!
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அனைவருக்கும் பிடித்தமானவராக இருந்து வந்த அர்ச்சனாவை ஆதரித்து வந்த ரசிகர்கள் காலப்போக்கில் அவரது பிடிவாதம், ஆளுமை உள்ளிட்ட பண்புகளை கண்டதும் அவரை தவிர்க்க ஆரம்பித்தனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பிக்பாஸ் போட்டியில் அவர் அதிகளவு ரசிகர்களை இழந்தார் என்று தான் சொல்ல முடியும். இதற்கு பின்பாக விஜய் தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்ற அர்ச்சனாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் ‘Mr and Mrs சின்னத்திரை’ நிகழ்ச்சியை விஜே மகாபா வுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார். இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்னாக அர்ச்சனாவின் உடலில் தீடீரென கோளாறுகள் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஓய்வில் இருக்கும் அர்ச்சனா, சமீபத்தில் தனது ரசிகர்களை ஒரு நேரலையில் சந்தித்து பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘மூளையில் அறுவை சிகிச்சை செய்த போது, தொடையில் இருந்து தசையை வெட்டி மூக்கு பகுதியில் ஒட்டி உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தொடை பகுதியில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளதால் என்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது. நிகழ்ச்சிக்கு வந்தால் ஒரு நாளைக்கு சுமார் 15 முதல் 16 மணிநேரம் வரை நின்று கொண்டே இருக்க வேண்டும். கால் வலி இன்னும் சரியாகாததால் நீண்ட நேரம் நிற்க முடியாது. அதனால் பழைய நிலைக்கு வர இன்னும் சில மாதங்கள் செல்லும்’ என கூறிய அவர் செப்டம்பர் 3 ஆம் தேதி ஒரு முக்கிய பரிசோதனை இருப்பதாகவும், அதன் பின்னரே உடல் நிலவரம் என்னவென்று தெரிய வரும் என தெரிவித்துள்ளார்.