நடிகர் விவேக் மரணம் குறித்து விசாரணை – தேசிய மனித உரிமைகள் ஆணையம்!
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அளிக்கப்பட்ட மனுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நடிகர் விவேக் மரணம்:
தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம், 17ம் தேதி காலமானார். இவர் மக்களால் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளாக தனது தனிப்பட்ட சமூக கருத்துகளுடன் கூடிய நகைச்சுவை வசனங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மேலும் சாய் பிரசன்னா என்ற அறக்கட்டளையை தொடங்கி மரங்களை நடும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.
கொடைக்கானல் ஏரி படகு சவாரிக்கான கட்டணம் உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!
கொரோனா பேரிடர் காலத்தில் அரசின் கொரோனா தடுப்பூசிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை அளித்தார். மேலும் மக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார். அதன் பிறகு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், அவர் மரணம் அடைந்தது பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.
TN Job “FB Group” Join Now
இதையடுத்து கொரோனா தடுப்பூசிக்கும், விவேக்கின் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது. அதனை தொடர்ந்து விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் நடிகர் விவேக்கின் மரணம் குறித்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தற்போது இந்த மனுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.