இரவு 8 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்துள்ளதையடுத்து கடைகள் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் படி காட்டாம் பூண்டி பகுதியில் இரவு 8 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நேரம் அதிகரிப்பு:
தமிழகத்தில் கடந்த நடப்பு மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் தொற்று அதிகமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மக்கள் கோவையில் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 25 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – திரிபுரா அரசு அனுமதி!
மேலும் கடைகள் இயங்கவும் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியாக கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி . கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவை மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.
TN Job “FB Group” Join Now
இந்த கட்டுப்பாடுகளின் விளைவாக விளைவாக தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காட்டாம்பூண்டி மருத்துவ வட்டார பகுதியில் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கும் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளது.