ஆகஸ்ட் 25 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – திரிபுரா அரசு அனுமதி!
திரிபுரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் நாளை முதல் அங்கு மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தையும் மீண்டும் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு அனுமதி:
திரிபுராவில் உள்ள 8 மாவட்டங்களில் சுமார் 4,400 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளது. இதில் 132 ஆங்கில ஊடக பள்ளிகள், 23 அரசு பட்டப்படிப்பு கல்லூரிகள் தவிர இரண்டு மருத்துவ கல்லூரிகள், ஒரு தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT), ஒரு மாநில தொழில்நுட்ப நிறுவனம், ஒரு NIIT, ஒரு தனியார் அரசு சட்டக் கல்லூரி, கலை மற்றும் கைவினை, இசை போன்ற பிற தொழில்முறை கல்லூரிகளில் பொறியியல் கல்லூரி போன்றவை உள்ளது.
“மக்கள் சேவையில் மாநகராட்சி, நமது சேவையில் நகராட்சி” – சூப்பர் திட்டம் அறிவிப்பு!
இவை அனைத்தும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது. மாநில தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி இயக்குநர் சாந்தினி சந்திரன் நேற்று மாலை, 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 25 முதல் திரிபுராவில் நேரடி வகுப்புகள் தொடங்குவதாக அறிவித்தார். பள்ளிகள் திறப்பது தொடர்பான அனைத்து நிலையான பாதுகாப்பு வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஒற்றை ஷிப்ட்ல் இயங்கும் பள்ளிகள் காலை 8 மணி முதல் 11 மணி வரை காலை ஷிப்ட் மற்றும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பிற்பகல் ஷிப்ட் நடத்த வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இரட்டை ஷிப்டுகளில் செயல்படும் பள்ளிகள் 10 சதவீத ஆசிரியர் வருகையுடன் படிக்கும் மாணவர்களுக்கான பட்டியலை உருவாக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21ம் தேதி உயர்கல்வித் துறை, கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவித்தது. அதன்படி, பொது பட்டப்படிப்பு கல்லூரிகள், தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்லூரிகள் உட்பட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் ஆகஸ்ட் 25 முதல் நேரடி வகுப்பிற்காக மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரிகளில் கோவிட்- 19 தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.