தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – தூய்மை பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுகுறித்த பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூய்மைப் பணிகள்:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் நோய்த்தொற்று பரவும் விகிதம் அதிகமாக இருந்ததால் மத்திய மற்றும் மாநில அரசு பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தேர்வுகளும் நேரடி முறையில் நடைபெறவில்லை. மேலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது.
WhatsApp மூலமாக கொரோனா தடுப்பூசி முன்பதிவு – மத்திய அமைச்சர்!
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து உள்ள காரணத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்க இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் சுழற்சி முறையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
பணியாளர்கள் மூலம் பள்ளி வகுப்பறை, வளாகம், கழிப்பறை, முகப்பு பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி வகுப்பறை முழுவதும் தண்ணீர் மூலம் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது. இது தவிர பள்ளி பதிவேடுகள், பராமரிப்பு அறை உள்ளிட்டவைகளின் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.