WhatsApp மூலமாக கொரோனா தடுப்பூசி முன்பதிவு – மத்திய அமைச்சர்!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வாட்ஸ் ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மண்டாவியா தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. மத்திய மாநில அரசுகளின் துரித நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. பல மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். பல மாதங்களாக திறக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாணவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி!
கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றனர். மீண்டும் கொரோனா மூன்றாம் அலை தாக்காத வண்ணம் மாநில அரசுகள் சில கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேர கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே வழியாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் மனசுக் மண்டாவியா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொது மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள 90131 51515 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு விவரங்களை அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.