தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலையிலேயே கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
கனமழை அறிவிப்பு:
நேற்று இரவு முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஆகஸ்ட் 21) முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்தியாவில் ஒரே நாளில் 34,457 பேருக்கு கொரோனா தொற்று – 375 பேர் உயிரிழப்பு!
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த அறிவிப்பின் படி இன்று காலை முதல் சென்னை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் அம்பத்தூர், ஆவடி, வில்லிவாக்கம், கோயம்பேடு, புழல், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதே போல திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஆத்தூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும்,
செப். 1 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
புதுச்சேரி, வில்லியனூர், காலாபேட்டை, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. மேலும் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.