செப். 1 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
உத்தரகண்ட் மாநிலத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க அரசு அனுமதித்துள்ளது. அதனுடன் சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு
உத்தரகண்ட் மாநில அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டுமாக திறக்கவும், நேரடி வகுப்புகளை துவங்கவும் அனுமதி கொடுத்துள்ளது. இருப்பினும், கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் உட்பட அனைத்து அலுவலக ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, கொரோனா தடுப்பு தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தேதிகள் – வெளியீடு!
இதை தொடர்ந்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையில் சிறிய மாற்றங்களை செய்து, வகுப்பறைகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையில் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இது தவிர கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன் கீழ்,
பிரபல நடிகை “நல்லெண்ணெய் சித்ரா” மாரடைப்பால் மரணம் – திரையுலகினர் இரங்கல்!!
- கல்லூரி வளாகங்களில் முகக்கவசங்கள் அணிவது, சானிடைசர்கள் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
- கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வருகை தரும் ஆசிரியர் மற்றும் மற்ற ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் கட்டிட வளாகத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்
- வளாகங்களில் முகக்கவசங்களை எப்போதும் அணிந்திருக்க வேண்டும்
- கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் நுழைவாயிலில் சானிடைசர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் மற்றும் கை கழுவும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு? ஊரடங்கு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!
- சளி, காய்ச்சல் அல்லது இருமல் அறிகுறிகளுடன் காணப்படும் எந்தவொரு மாணவர் அல்லது ஆசிரியர்களும் கல்லூரிகளுக்கு வருவது தடை செய்யப்படும்.
- மாணவர்கள் ஆறு அடி தூரத்தில் அமர அனுமதிக்கப்படுவார்கள்
- கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
- மாணவர்கள் முன்பு போல போக்குவரத்து வசதிகளைப் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
- இருப்பினும், பயணத்தின் போது கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.