மேடையில் சர்ப்ரைஸ் கொடுத்த மைனா நந்தினியின் கணவர் – அவரே வெளியிட்ட புகைப்படம்!
விஜய் டிவி Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை மைனா நந்தினி யோகேஷ் ஜோடி ரொமான்ஸ் சுற்றில் யோகேஷ், நந்தினிக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார்.
மைனா யோகேஷ்:
சின்னத்திரை சீரியல் மூலமாக பிரபலமானவர் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்ததால் அவர் பெயருக்கு முன்னாள் மைனா சேர்த்து கொண்டு மைனா நந்தினி என பிரபலமடைந்தார். அவர் பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். கலக்கப்போவது யாரு சீசன் 5 மற்றும் கலக்கல் சாம்பியன்ஸ் உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். சின்னத்திரை மட்டுமல்லாமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி, நம்ம வீட்டு பிள்ளை, வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் மைனா நடித்துள்ளார்.
அவருக்கு ஏற்கனவே ஜிம் மாஸ்டர் கார்த்திக் என்பவருடன் திருமணம் ஆன நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரை பிரிந்தார். அதன் பின்னர் கார்த்திக்கும் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் தனது நெருங்கிய நண்பரான யோகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது துருவன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மைனா, கணவருடன் யோகேஷூடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
கடந்த வாரம் அந்த நிகழ்ச்சியில் ரொமான்ஸ் சுற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவர் மைனாவிற்கு செம சர்ப்ரைஸ் ஒன்றை அறிவித்துள்ளார். அதில் தனது காதல் மனைவி மைனாவின் உருவத்தை அவரது நெஞ்சில் டாட்டூவாக வரைந்திருந்தார். இதனை எதிர்பார்க்காத மைனா கணவரை கட்டிப்பிடித்து கண் கலங்கினார். இதை பார்த்த போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் பிரம்மிப்பில் இருந்தனர்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து யோகேஷ் கூறுகையில், மைனா என்னை எவ்வளவு பிடிக்கும் என கேட்பார். அதை காட்டத்தான் இது என்று கூறியுள்ளார். டாட்டூவின் முழு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் மைனா பதிவு செய்து கீழே “நான் கொஞ்சம் கூட எதிர் பாக்காத சர்ப்ரைஸ் உன்கிட்ட ஐ லவ் யூ. உன்கூட எப்போதும் கட்டுப்பாடில்லாத காதல் தான், நன்றி சொல்லக் கூடாது. ஆனால் சொல்லணும்னு தோனுது. நன்றி பாப்பா. நமக்கு ஒரு பொண்ணு இருந்தா உன்ன மாதிரி தான் கணவர் இருக்கனும்னு கடவுளை வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.