ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான அட்டவணை மாற்றம் – பிசிசிஐ அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டிகளுக்கான தேதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ரஞ்சி டிராபி 2021-22:
இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். பழம்பெரும் போட்டி தொடர்களில் ஒன்றான இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் நடத்தப்படும். இந்த போட்டி டெஸ்ட் போட்டிகளின் பாணியில் நடைபெறும்.
TCS நிறுவன ஊழியர்கள் WFH முறையில் பணியை தொடர அனுமதி – CEO தகவல்!
கொரோனா வைரஸ் பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் விளையாட்டு துறையும் பெரிதளவு பாதிக்கப்பட்டது. உள்நாட்டு போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. அதன் பின்னர் தொற்றின் வேகம் குறைந்ததால் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. அவையும் பார்வையாளர்கள் இன்றியே நடைபெற்றன.
தமிழக அரசு வேலைவாய்ப்பு – 70 லட்சம் பேர் காத்திருப்பு, ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் தொற்றின் தாக்கம் குறையாமல் இருந்ததினால், கடந்த 2020ம் ஆண்டிற்கான IPL போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்று வந்த IPL போட்டிகள் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடைபெற உள்ளதாக புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
முன்னதாக ரஞ்சி தொடர் நவம்பர் 16 முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கில் போதுமான பயிற்சிகள் மேற்கொள்ளப்படாததினால், வீரர்கள் இந்த தொடருக்கு தயாராக உதவியாக அந்த அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வீரர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கிட இத்தொடரை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இப்போட்டிகள் 05 ஜனவரி 2021 முதல் 20 மார்ச் 2021 வரை நடத்தப்படவுள்ளது. ரஞ்சி கோப்பை போன்றே ஏனைய உள்நாட்டு தொடர்களான சையது முஸ்தாக் அலி, விஜய் மெர்ச்சண்ட் தொடர்களுக்கும் மாற்று தேதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.