கண்ணன் & ஐஸ்வர்யாவை தெருவுக்கு அனுப்பிய பிரசாந்த், உதவ முன்வரும் மீனா – வெளியான ப்ரோமோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ப்ரோமோ
விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த சீரியலில் தற்போது முக்கியமான கட்டமான கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்து மூர்த்தி கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் வீட்டிற்குள் வர கூடாது என்று கூறி விடுகிறார். இதனால் இருவரும் தவித்து வந்த நிலையில், இதனை பார்த்து பொறுக்காத முல்லை தனது அப்பாவிடம் கூறி இருவரையும் தங்க வைக்க ஏற்பாடு செய்கிறார். பார்வதிக்கு இதில் இஷ்டம் இல்லை என்றாலும் முல்லைக்காக பொறுத்து கொள்கிறார்.
அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த விஷயம் அறிந்து தானம் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். இப்படியாக நிலையில் தற்போது ஒரு புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் முல்லை வீட்டில் இருப்பதாய் பிரசாந்த் மற்றும் கஸ்தூரி இருவரும் அறிந்து கொள்கின்றனர். இதனால் கோபம் அடையும் கஸ்தூரி ஐஸ்வர்யாவை அனைவர் முன்பாகவும் அடிக்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின்னர், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இங்கு இருக்க கூடாது என்று கூறி வெளியே அனுப்புகிறார். பிரசாந்த் தனது பங்கிற்கு கண்ணனை அடித்து வெளியே அனுப்புகிறார். இதனை அறியும் முல்லை அதனை மீனா மற்றும் தனத்திடம் தெரிவிக்கிறார். இதனால் மீனா தனது அப்பாவை தனியாக சந்தித்து கண்ணன் விஷயம் குறித்து பேசுகிறார். கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் பார்த்துக்கொள்ளுமாறு தனது தந்தையிடம் மீனா கூறி அவர்களுக்கு ஒரு வழி செய்வார் என்று எதிர்பார்ப்படுகிறது. நாளுக்கு நாள் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதை அதிக விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.